Saturday, August 8, 2009

பளியர் ஆதிவாசிகளின் கலைவிழா

நாள் : 10 ஆகஸ்ட் 2009, திங்கள் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை
இடம் : தேனி, உழவர்சந்தை அருகில் உள்ள வசந்த மகாலில்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு மண்ணின் மூத்த குடிமக்களின் கலை, கலாச்சார, பண்பாட்டுத் தொன்மங்களை உலகிற்கு சொல்லிடும் முகமாக பளியர் ஆதிவாசிகளின் கலைவிழா இரண்டாவது ஆண்டாக வருகின்ற 10 ஆகஸ்ட் 2009, திங்கள் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை தேனி, உழவர்சந்தை அருகில் உள்ள வசந்த மகாலில் நடைபெற உள்ளது.

ஆதிவாசிகளுக்கான வனநில உரிமை அங்கீகார சட்டத்தை முறையாகவும், வேகமாகவும் நிறைவேற்ற வலியுறுத்தி மேலப்பட்டி பிள்ளையார்கோவில், பெரியகுளம் ரோட்டில் இருந்து துவங்கி உழவர்சந்தை வரை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து சமூக செயல்பாட்டாளர்கள், மற்றும் ஆதிவாசிகள் தலைவர்களின் உரைவீச்சு நடைபெறவுள்ளது.

இறுதியாக எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும், ஆதிவாசிகளின் கலை, கலாச்சார பண்பாட்டு தொன்மங்கள், , வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்திடும் நடனம், ஆடல் பாடல், பாரம்பரிய இசை, நாடகம் போன்ற பாரம்பரிய கலை வடிவங்களின் அரங்கேற்றம் நிகழ உள்ளது. எல்லோரும் குடும்பத்தோட வாங்க. எப்படி சண்டை சச்சரவில்லாமல், அணுசரனையாக, இயற்கையோட இசைந்து, குறைவான நுகர்வு பழக்கத்தோட வாழ்வது போன்ற வாழ்வியல் கோட்பாடுகளை நேரடியாய் கண்டு, கேட்டு செல்ல ஓர் அரிய வாய்ப்பு.
இந்த நிகழ்ச்சியை ஆதிவாசிகள் அல்லாத மற்ற சமுதாய மாக்களுக்காக (அட நாகரீக மனுசங்கன்னு சொல்லிக்கிட்டு பூமியை சூடாக்கிட்டு திரியிற நாம தாங்க) ஏற்பாடு செய்றவங்க வன ஆதிவாசிகளுக்கான கூட்டு செயல்பாடு (Collective Action for Forest Adivasi in Tamilnadu – CAFAT) – தமிழகம் என்னும் ஆதிவாசி பளியர் மத்தியில் வன நில உரிமை அங்கீகார சட்டம் 2006 பற்றி பிரசாரம் மற்றும் உரிமை மீட்டெடுக்கும் பனியில் ஈடுபட்டுள்ள சமூக செயல்பாட்டு இயக்கங்கங்களின் கூட்டமைப்புங்க. இது மதுரை - பீல் (PEAL) அலுவலகத்தை தலையிடமாக கொண்டு செயல்படுதுங்க.

கலைவிழா பங்கெடுத்துக்கொள்ள முடியாத வெளியூர் மற்றும் உள்ளூர் நண்பர்களுக்காக கலை விழாவை பற்றிய செய்திகளை கொண்டு சேர்க்கும் பணியை இந்த அடியோன் (மாரிராஜன்) தன்னுடைய வலைத்தளத்தின் (www.tmarirajan.blogspot.com) மூலம் செய்ய முயற்சி எடுத்துக்கிட்டு இருக்கிறார். அதனுடைய ஒரு முயற்சியாகத்தான் இந்த அழைப்பிதழ். அப்புறம் மீண்டும் சந்திப்போம் கலைவிழா பற்றிய மேலாதிக தகவல்களுக்கு மறக்காம இந்த கிராமத்தினின் கிருக்கல்கள் (www.tmarirajan.blogspot.com) இணையதள பக்கத்தை பாருங்க. மீண்டும் வேறு ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் சந்திப்போம். சந்திப்போம். நன்றி. தொடர்ப்புக்கு ௯௪௪௨௫௨௪௫௪௫

No comments: